வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
ஔவையார் அருளியது.
பொதுப் பொருள்:
தினமும் மலர்களால் தும்பிக்கையான் மேல் நம்பிக்கை வைத்து அவர் பாதங்களை அர்ச்சிப்பவர்க்கு நல்ல வாக்குபலிதம், தீங்கு செய்வோரையும் மன்னித்து, மறக்கும் நல்ல மனம், திருமகளின் கடைக்கண் பார்வை ஆகியன கிட்டும்.
(ஔவையார் அருளிய இத்துதியை விநாயகர் சதுர்த்தி அன்று (9.9.2013) ஆரம்பித்து தினமும் பாராயணம் செய்ய பதினாறு செல்வங்களும் கிட்டும்.)