21.02.2014

கோமாதா பூஜையை எந்தக்கிழமையில் செய்வது நல்லது?


தினமும் செய்வது மிக மிக விசேஷமானது. யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை என்று திருமந்திரம் என்னும் நூல் கூறுகிறது. எல்லோராலும் தினமும் எளிமையாகச் செய்யக் கூடிய உயர்ந்த தர்மம் பசுமாட்டிற்கு புல் கொடுத்து வழிபடுவது என்பது இதன் பொருள். தினமும் செய்ய இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது செய்யலாம்.