வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.
தொடர்ந்து 25 நாட்களும் விசேட பூஜைகள் நடை பெற்று சுவாமி வெளிவீதியுலாவும் இடம்பெறவுள்ளன.
தினமும் உற்சவங்கள் நடைபெறுவதுடன் எதிர்வரும் செப்டெம்பர் 3ம் திகதி சப்பறத் திருவிழாவும், 4ம் திகதி தேர்த் திருவிழாவும் 5ம் திகதி தீர்த்தத் திருவிழாவும், 6ம் திகதி பூங்காவனமும் இடம்பெறவுள்ளன.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமைபோல யாழ் மாநகரசபை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.இன்றைய கொடியேற்ற நிகழ்வில்யாழ் மாவட்டத்தின் பல பகுதிதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
(நன்றி-U) G.JKMEDIAWORKS 2013